புதிய உலகம்

இந்தப் பிரபஞ்சத்திற்கு  வெளியே

ஒரு உலகம்

அங்கே

இரவு    வானில்

நிலவு உதித்திட  வேண்டாம்

   "நியே நிலவாக "

செடிகளிடத்தே பூத்திட வேண்டாம் பூக்கள்

    " நீயே   பூவாக "

வந்த காலம் வந்துவிட வேண்டாம்

  " நீ இருக்கும் வரை"

காற்று வீசிவிட  வேண்டாம் 

   " என் மூச்சு இருக்கும் வரை "

நான் வாசிக்கக்
   
  "கவிதைகளாக  நீ "

நீ சுவாசிக்க 

"மூச்சுக்காற்றாக நீ "

மூட்டை கட்டிவந்த  

     " நினைவுகள் "

நான் பார்க்கும் இடமெல்லாம்  

     " நீ "

நான் பார்க்கும் இடமெல்லாம்  

     " நான் "

இருவரின்  கண்களின் வழியே

   "மின்சாரம் "

என் கவிதைகளின்

   "வெளிச்சம்"

முடிவில்லாத   "அன்பு "

எல்லை இல்லாத  "ஏக்கம் "

மரணமில்லாத    "வாழ்க்கை"

இவைபோதும் 
     
                         அந்த  உலகில்................

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை மேகங்கள் 1

கவிதைக் மேகங்கள்