கவிதை மேகங்கள்

காதல் ஜீரம்

என்னை வாட்டுகிறது

உன் வேட்கமழையில்

நனைந்தது    முதல் ......


கண்களின்  வழியே

சிதைந்து  போனேன்

உன் புன்னைகைப் புயல்

வீசிய  பொழுது......



என்

இரவு   வாகனத்தில்

பயணம் செய்யும் நிலவு

ஒவ்வொரு  நாளும்

உன் வீட்டருகே

இறங்கிவிடுகிறது,

ஆனாலும்  நான்

நீல் அம்ஸ்ட்ராங்காய்  வருவேன்

நிலவொளியில்

உன் அழகை   ரசிக்க......


காற்று  அடிக்கும்   போதெல்லாம்

பறக்கும் காகிதங்கள்  போல்

உன் முகம் காணும்போதெல்லாம்

தவிக்கின்றேன் ,

உன் புன்னகைக் காற்று

வீசினால்

நானும்  காகிதங்களாய் பறப்பேன்

என்றும்  உன்

                                  நினைவுகளுடன்.......


வினாத்தாளாய் 

உன்னிடத்தில்  வரும்

என் பார்வைக்கு

உன் கடைக்கண்ணால்

விடைஎழுது ,

உன்

கண்ணசைவில்    தான்

என்

கவிதைப்  பாடத்தின் முடிவு.......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை மேகங்கள் 1

கவிதைக் மேகங்கள்